Want to create an interactive transcript for this episode?
Podcast: Dravidian Stock
Episode: 28.குடிசைதான்! ஒரு புறத்தில் கூரிய வேல்வாள் வரிசையாய் அமைத்திருக்கும் - புறநானாற்றுத் தாய்! || கலைஞர் கருணாநிதி அவர்கள் 1945 ஆம் ஆண்டில் எழுதிய உரைநடை கவிதை
Description: கலைஞர் கருணாநிதி அவர்கள் 1945 ஆம் ஆண்டில் எழுதிய உரைநடை கவிதை
குடிசைதான்! ஒரு புறத்தில்கூரிய வேல்வாள்வரிசையாய் அமைத்திருக்கும் - வையத்தைப்பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்;மிளிரும்புலியின் குகையினிலே அழகில்லை -புதுமையல்லன்று!கிலியும் மெய் சிலிர்ப்பும்கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டாமானத்தின் உறைவிடம் -மறவன் மாளிகை!இல்லத்து வாயிலிலேகிண்ணத்துச் சோற்றோடுவெல்லத்தைச் சிறிது கலந்துவயிற்றுக்குள் வழியனுப்பப்பொக்கை வாய்தனைத் திறந்துபிடியன்னம் எடுத்துப் போட்டாள்பெருநரைக் கிழவி யொருத்தி.ஓடி வந்தான் ஒரு வீரன்"ஒரு சேதி பாட்டி!" என்றான்.ஆடிவந்த சிறுமிபோல்பெருமூச்சு வாங்குகின்றாய்ஆண் மகனா நீ தம்பி!மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும். பின்,பேச்சுக்குத் தொடக்கம் செய் என்றாள் அந்தக்கிண்டலுக்குப் பேர்போனகிழட்டு தமிழச்சி!வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி - உன்வாடிக்கைக் கேலியை விட்டுவிடு.'மடிந்தான் உன் மகன் களத்தில்'என்றான் - மனம்ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை!"தாயம் ஆடுகையில் காய்களைவெட்டுவதுண்டு-களமும் அதுதான்.காயம் மார்பிலா? முதுகிலா?கழறுவாய்" என்றாள் - முதுகிலென்றான்.கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்;வாளை எடுத்தனள்.முழவு ஒலித்த திக்கை நோக்கிமுடுக்கினாள் வேகம்!"கோழைக்குப் பால் கொடுத்தேன்குப்புற வீழ்ந்து கிடக்கும்மோழைக்குப் பெயர்போர் வீரனாம்! முன்பொருநாள்பாய்ந்துவந்த ஈட்டிக்குப்பதில் சொல்ல மார்பைக் காட்டிச்சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர்.அவருக்குப் பிறந்தானா?அடடா மானமெங்கே - குட்டிச்சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் - இங்குவீணை நரம்பினிலே இசை துடிக்கும்.அதுவும் மானம் மானமென்றே ஒலிக்கும்!மதுவும் சுறாவும் உண்டு வாழும் மானமற்ற வம்சமா நீ - ஏடாமறத் தமிழ்க் குடியிலே மாசு தூவி விட்டாய்மார்பு கொடுத்தேன்மகனாய் வளர்த்தேன் - தின்றுகொழுத்துத் திமிர் பாய்ந்த தோள்களெங்கே?தினவெடுக்கவில்லையா? அந்தோ!வேலுக்கு வழி சொல்ல வகையற்றகோழையே - என் வீரப்பாலுக்கு வழி சொல்வாய்!! என்று கதறினாள்எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.சென்றங்குச் செரு முனையில்சிதறிக் கிடந்தசெந்தமிழ்க் காளைகளைப்புரட்டிப் பார்த்தாள் - அங்குநந்தமிழ் நாட்டை காக்கஓடிற்று ரத்த வெள்ளம்!பிணக்குவியலிலே பெருமூச்சுவாங்க நடந்தாள்!மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை - மகன்பிறந்த போதும் மகிழ்ச்சிக்குஎல்லையுண்டு - அவன்இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி!இதைக் கண்டாள் - இதயங் குளிர்ந்தாள்!"எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லைஎன் மகன் வீரனாய் இறந்தான்" என்றாள்.அறுத்தெறிய இருந்தேன்அவன் குடித்த மார்பை - அடடா!கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே?வாளிங்கே! அவன் நாக்கெங்கே?"என்று நாக்கை அறுப்பதற்குக் கேட்டாள் தமிழ்த் தாய். புறநானாற்றுத் தாய்!