Want to create an interactive transcript for this episode?
Podcast: Dravidian Stock
Episode: கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா - கவிஞர் அனுமா
Description: கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா- கவிஞர் அனுமா
தொல்காப்பியம் தொல்காப்பியரால் இயற்றப்பட்டது. தொல்காப்பியப்பூங்கா மு.கருணாநிதி அவர்களால் அதன் விளக்க உரையாக மலர்ந்தது. காலத்திற்கேற்ற புதுமைக் கருத்துக்களைக் கையாண்டு வரலாற்றுக் குறிப்புகளை ஆங்காங்குத் தந்து விளக்கம் எழுதிய தனிச்சிறப்பு கலைஞருக்கே உரியது. தமிழில் கிடைத்துள்ள நூல்களில் மிகத் தொன்மையானது தொல்காப்பியம். இதை ஒரு,”மரம் அடர்ந்த காடு” எனக் கருதி உள்நுழைய அஞ்சி நின்றனர் தமிழ் மக்கள். அது காடன்று,”கவின் மலர்கள் மலர்ந்து மணம் கமழும் பூங்கா” என நிறுவித் தம் கருத்துக்களை வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்துக்காட்டி அரிய உரை விளக்கம் தந்தவர் கலைஞர்.